Saturday, August 12, 2023

சத்தியத்தை உலகறியச் செய்த விவாதம் தொடர் – 5 புகாரியில் பதிவாகியுள்ள ஒரு பொய்ச் செய்தி!

எம்.எஸ். செய்யது இப்ராஹீம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், அவர்கள் மீது அவதூறுகளைச் சுமத்தும் வகையிலும், திருக்குர்ஆனில் அண்ணலார் குறித்து வல்ல இறைவன் சிலாகித்துக் கூறியுள்ள சிறப்பம்சங்களைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் ஒரு சில செய்திகள் சரியான அறிவிப்பாளர் வரிசையுடன் புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்டுக்கதைகள் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு முரணாக அமைந்துள்ளதால் அவற்றுக்கும் அண்ணலாருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி நாம் அவற்றை மறுக்கின்றோம். இந்த இடத்தில் மீண்டும் ஒன்றை நாம் நினைவூட்டிக் கொள்கின்றோம்; அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று சொல்லப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் இத்தகைய செய்திகள் கட்டுக்கதைகள் என்பதுதான் நமது நிலைப்பாடு. அண்ணலார் கூறிய செய்திகளை நாம் மறுக்கவில்லை; இந்தக் கட்டுக்கதைகளை அண்ணலார் கூறவே இல்லை என்றுதான் மறுக்கின்றோம். இப்போது இத்தகைய செய்திகள் குறித்து நாம் வைத்த வாதங்களையும், அதற்கு பரலேவி மதத்தினர் எடுத்து வைத்த மறுப்பையும், அதற்கு நாம் எழுப்பிய எதிர்க் கேள்விகளையும் இங்கே காண்போம். ‘புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் ஒரு செய்தி ஆதாரப்பூர்வமானதாகப் பதிவு செய்யப்பட்டிருக்குமேயானால் அது 100 சதவீதம் உண்மையானது; அதில் எவ்வித சந்தேகமும் இல்லை; அதை மறுக்கக்கூடாது; அதை அப்படியே நம்ப வேண்டும்’ என்பதுதான் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பவர்களின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடு எவ்வளவு தவறானது என்பதை விளங்க வைப்பதற்காக கோவை விவாதத்தில் பரலேவி மதத்தினரை நோக்கி புகாரி என்ற ஹதீஸ் கிரந்தத்தில் இருக்கும் ஒரு செய்தியை எடுத்துக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. புகாரியில் 3849வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தியை முன்வைத்து இந்தச் செய்தியை ஆதாரப்பூர்வமான செய்தியாக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? எனக் கேள்வி எழுப்பினோம். இது ஆதாரப்பூர்வமான செய்தியே அல்ல; ஆதாரப்பூர்வமான செய்தி என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுக்கதை தான் என்பது இந்தச் செய்தியைப் படிக்கும் எவருக்கும் இலகுவாகத் தெரியும். முதலில் அந்தச் செய்தியைப் படியுங்கள்: விபச்சாரம் செய்த பெண் குரங்குக்கு கல்லெறி தண்டனை(?) அறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன். அறிவிப்பவர்: அம்ர் பின் மைமூன் நூல்: புகாரி 3849 புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி குறித்து விவாதத்தின் போது கேள்வி எழுப்பினோம். குரங்குகள் விபச்சாரம் செய்யுமா? ஒரு குரங்கு விபச்சாரம் செய்ததா இல்லையா என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? விபச்சாரம் செய்த ஒரு குரங்கைக் கண்டுபிடிப்பதாக இருந்தால் அந்தக் குரங்கின் கணவன் குரங்கு எது என்பதையும், அந்தப் பெண் குரங்கிற்கு அந்நியக் குரங்கு எது என்பதையும் எப்படிக் கண்டறிவது? திருமணம் முடித்த நபர்கள் விபச்சாரம் செய்தால் தான் விபச்சாரத்திற்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்படுவது மார்க்கக் கட்டளை! அப்படியானால் விபச்சாரம் செய்த அந்தப் பெண் குரங்கு திருமணம் முடித்த குரங்கு என்பதை யார், எப்படி உறுதி செய்தார்கள்? குரங்குகளுக்கு மத்தியில் திருமண பந்தம் உள்ளதா? அந்த குரங்குகள் விபச்சாரம் செய்ததை உறுதி செய்ய நான்கு சாட்சி குரங்குகள் வரவேண்டுமல்லவா? அந்த நான்கு சாட்சியம் கூறிய குரங்குகள் வந்து யாரிடம் சாட்சி கூறின? இதுபோன்ற சட்டதிட்டங்கள் எல்லாமே மனிதர்களுக்குத்தானே அல்லாஹ் வழங்கியுள்ளான்? அதை குரங்குகளுக்கு பொருத்திப் பார்த்து குரங்குகளுக்கு தண்டனை வழங்கியது யார்? ஆதாரப்பூர்வமான செய்தியாக புகாரி என்ற தனது ஹதீஸ் கிரந்தத்தில் புகாரி இமாம் பதிவு செய்துள்ளார்களே! அப்படியானால் குரங்கு விபச்சாரம் செய்ததாக வரும் செய்தியை புகாரி இமாம் அவர்கள் நம்பித்தான் பதிவு செய்தார்களா? விபச்சாரம் புரியும் குரங்குகளையெல்லாம் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பதுதான் புகாரி இமாமின் கொள்கை என்று சொல்லப் போகின்றீர்களா? என்ற சராமரியான கேள்விகளால் கப்ரு வணங்கிகளின் விழி பிதுங்கியது. புகாரி இமாம் ஆதாரப்பூர்வமான செய்தியாகப் பதிவு செய்துள்ள இந்தச் செய்தி கட்டுக்கதை தான் என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இதுபோலத்தான் திருக்குர்ஆனுக்கு முரண்படும் வகையில் அமைந்த சில செய்திகளை, தனக்குக் கிடைத்த தகவலின்படி ஆதாரப்பூர்வமான செய்தியாக புகாரி இமாம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். புகாரி இமாம் பதிவு செய்ததாலேயே அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல என்பதை விளக்கி கேள்வி எழுப்பினோம். கடைசி வரை வாய்திறக்காத கப்ரு வணங்கிகள் கப்ரு வணங்கிகளான பரலேவிகள் கடைசி வரைக்கும் குரங்கு குறித்த செய்திக்கு வாய் திறக்கவே இல்லை. இந்தச் செய்திக்கு நாங்கள் பிறகு பதில் சொல்லுவோம்; ஒவ்வொன்றாகப் பதில் சொல்லுவோம் என்றெல்லாம் பில்டப் கொடுத்த பரலேவிக் கூட்டம் கடைசி வரைக்கும் மூச்சுவிடவில்லை. விவாதம் நிறைவடையப் போகும் கடைசி அமர்விற்கு முந்திய அமர்விலும் கூட இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் கூட அதற்குப் பதிலளிக்கவில்லை. இதன் மூலம் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்து வைத்த வாதம் 100 சதவீதம் சரியானது என்பதை பரலேவிக் கூட்டமே தங்களது அசாத்திய மௌனத்தின் வாயிலாக ஒப்புக்கொண்டு விட்டனர். உதாரணத்திற்குத் தான் இந்த ஒரு செய்தி. இதுபோல பல செய்திகள் திருக்குர்ஆன் கூறும் உண்மைகளுக்கு முரணாகவும், திருக்குர்ஆன் கூறும் அறிவுக்கு எதிரானதாகவும், தூய இஸ்லாமிய மார்க்கத்தையும், ஒழுக்கத்தின் உறைவிடமாகத் திகழும் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. அந்த கட்டுக்கதைகளைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் மறுக்கின்றது. அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தி வந்துள்ள ஒரு செய்திதான் உம்மு ஹராம் (ரலி) என்ற அந்நியப் பெண்ணோடு நபிகளார் தனித்திருந்தார்கள்; அந்தப் பெண்மணி நபிகளாருக்கு பேன் பார்த்து விட்டார்கள் என்று வரும் செய்தி. இந்தக் கட்டுக்கதை குறித்து விவாதத்தின் போது நாம் எடுத்து வைத்த வாதங்களையும், அதற்கு பரலேவி மதத்தினரின் உளறல்களையும் அடுத்த இதழில் காண்போம். குறிப்பு: புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள, குரங்கு விபச்சாரம் செய்தது குறித்த சம்பவத்தை உண்மையென்று நீங்கள் நம்புகின்றீர்களா? இது இட்டுக் கட்டப்பட்ட செய்தி தானே என்று நமது சகோதரர்கள் ஒரு கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது சலஃபுக் கும்பலைச் சேர்ந்த ஒரு சலபியிடம் இதே கேள்வியை கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த அந்தக் கள்ள சலஃபு ஆலிம், ‘ஆமாம்! குரங்குகள் அதிகம் ரோஷம் உடையவை; அதனால் தான் கணவன் அல்லாத வேறு குரங்கோடு இணைந்ததற்காக அந்த மனைவி குரங்கை மற்ற குரங்குகள் கல்லால் எறிந்து கொலை செய்துள்ளன’ என்று அதி அற்புதமான(?) விளக்கமொன்றை அளித்தாரே பார்க்கலாம். கட்டுக்கதைகளை உண்மை என்று மக்களை நம்ப வைப்பதற்கு இவர்கள் எத்தகைய பொய்களையும் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று! இதுபோல கேவலமான விளக்கம் சொல்லி மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான் பரலேவி மதத்தினர் இந்தக் குரங்கு செய்தி பற்றி கடைசி வரைக்கும் வாய் திறக்காமல் ஓட்டம் பிடித்திருக்கின்றார்கள் என்பது யாருக்கும் தெரியாமலில்லை.

தலையங்கம் - செல்லாத நோட்டுகள்! சொல்லாத சோதிடர்கள்!!

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி அன்று மத்தியில் ஆளுகின்ற பாஜக மோ(ச)டி அரசு திடுதிப்பென்று மாலை நேரத்தில் ஓர் அதிரடி அறிவிப்பின் மூலம் நாட்டில் புழக்கத்தில் உள்ள ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று ஆக்கியது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத் தான் இந்த அறிவிப்பு என்று அதற்கு ஒரு நொண்டிக் காரணத்தையும் கூறியது. மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது சகாரா குழுமத்திடமிருந்து 55 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிடு வதாக அறிவித்த சில மணி நேரங்களில் அதை திசை திருப்பும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும் விரைவில் உ.பி.யில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தலில் மற்ற கட்சிகள் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை அள்ளி வீசி ஓட்டுகளை விலைக்கு வாங்கி விடக் கூடாது. அதன் மூலம் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. தான் மட்டும் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வீசி ஓட்டுகளை விலைக்கு வாங்கி அரியணையில் ஏற வேண்டும் என்ற (கு)யுக்தியுடன் பாஜக அரசு இந்தக் கயமை வேலையில் களமிறங்கியுள்ளது. அரசு இயந்திரம் தன்னுடைய கைவசத்தில் இருப்பதைச் சாதகமாகப் பயன்படுத்தி அச்சு இயந்திரத்தின் மூலம் கற்றை, கற்றையான இரண்டாயிரம் நோட்டுகளை அச்சடித்து கட்டு கட்டாகச் சுமந்து சென்று வாக்காளர்கள் கையில் அடித்து, வாக்குகளை கட்டுக்கட்டாக அறுவடை செய்யலாம் என்று கனவு கண்டு காய் நகர்த்தியது. ஆனால் அதன் கனவுக் கோட்டை தகர்ந்து போனதுடன் மட்டுமல்லாமல், ஆப்பசைத்த குரங்காக மாட்டிக் கொண்டு தவிக்கின்றது; தத்தளிக்கின்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சுவிஸ் வங்கியிலிருந்து கருப்பு பணத்தை மீட்டு உங்கள் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொன்ன மோடி மக்கள் சுருக்குப் பையில் வைத்திருந்த பணத்தைச் சுருட்டி எறியும் காகிதமாக்கியதுடன் அவர்களது கழுத்துகளுக்கு சுருக்குக் கயிறுகளையும் மாட்டிக் கொண்டிருக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. பத்திரிக்கைகளில் பதிவான செய்திகள் அடிப்படையிலேயே சொல்கின்றோம். அனைத்து தரப்பு மக்களின் கைகளில் புழங்கிக் கொண்டிருந்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காலாவாதியாக்கிய கையலாகாத மோடியின் மீது காரித் துப்பிக் கொண்டிருக்கின்றனர். குடற்கொதிப்பில் கொந்தளிக்கும் குமுறல் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். வயிற்றெரிச்சல்களை வசவு மொழிகளாக வடித்துத் தள்ளுகின்றனர். குருவி போல் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்த பணம் மோடியின் ஒரே ஒரு கூவலால் செல்லாக் காசாகி விட்டது. உ.பி. கொரக்பூர் வங்கி முன்னால் ஒரு பெண் சலவைத் தொழிலாளி தான் சேர்த்து வைத்திருந்த சில்லரை நோட்டுகளை மாற்றி ஆயிரம் ரூபாய் தாள்களாகப் பெற்றுக் கொள்கின்றார். அந்தப் பணம் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வெளியாகின்றது. அவ்வளவு தான் அதிர்ச்சியில் அங்கேயே இறந்து விடுகின்றார். இன்னொரு சம்பவத்தின் போது மஹுவா மாஃபி என்ற கிராமத்தில் ஓர் எட்டு வயதுப் பெண் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்காக தகப்பனார் தனது வாகனத்தில் பெட்ரோல் பம்புக்கு ஆயிரம் ரூபாய் தாளுடன் செல்கின்றார். அங்குள்ள பணியாளர் ஆயிரம் ரூபாய் தாளை மறுத்ததால் எட்டு வயது பெண் குழந்தை மரணத்தைத் தழுவுகின்றது. கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் – ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை என மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது. இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது. மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் – கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்தச் சிசு மூச்சை நிறுத்திவிட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ரகுநாத் வர்மா இன்று இல்லை. திருமணத்தை எதிர்பார்த்திருந்த மகள் செய்வதறியாது நிற்கிறார். பிஹாரைச் சேர்ந்த விவசாயி சோனார் இன்று இல்லை. மகள் சித்தப்பிரமை பிடித்தவரைப் போல மூலையில் முடங்கிக் கிடக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் 11 உயிர்கள்; தெலங்கானா, பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகத்தில் தலா 2 உயிர்கள், ஒடிசா, ஆந்திரம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், வங்கத்தில் 7 உயிர்கள்; அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 3 உயிர்கள் என்று பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு, 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 40 உயிர்கள் போயிருக்கின்றன. தற்போதைய தகவல்கள் படி இதுவரை செல்லாத நோட்டுகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 80ஐ நெருங்கியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.-ன் பிரச்சாரகர் சூரிய நாராயண ராவ் என்பவர் இறந்த போது, “அவர் தன்னுடைய வாழ்வை தாய்நாட்டிற்காக அர்ப்பணித்து விட்டார். அவர் ஆத்மா சாந்தி அடையட்டுமாக!” என்று டுவீட்டரில் இரங்கல் பதிவிட்ட நரேந்திர மோடி ஆயிரம், ஐநூறு செல்லாது என்ற பைத்தியக்காரத்தனமும், பித்துக்குளித்தனமும் நிறைந்த அறிவிப்பால் 80 மனிதர்களின் புனித உயிர்கள் பலியாகி உள்ளன; பறி போயுள்ளன. அதற்கு எந்த ஓர் இரங்கலையும் இரக்கத்தையும் இவர் பதிவிடவில்லை. இரக்கமற்ற நரேந்திரமோடியின் இந்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் 16 பேர்கள் இறந்து போன மரணச் செய்தி தொலைக்காட்சியில் விவாதப் பொருளான போது அந்த விவாதத்தில் பங்கெடுத்த உயர்சாதி எஸ்.வி. சேகர், ‘128 கோடி மக்களில் 16 பேர்கள் தானே இறந்திருக்கின்றார்கள்’ என்று கேட்கின்றார். இதற்குக் காரணம் என்ன? மோடியும் எஸ்.வி. சேகர் கேடியும் மனுதர்ம சிந்தனை கொண்டவர்கள். அதனால் இவர்களிடம் பிராமணர்களைத் தவிர மற்றவர்களின் உயிர்களுக்கு எந்த மாண்பும், மரியாதையும் இல்லை. இதோ அவர்களுடைய மனு சாத்திரம் சொல்வதைக் கேளுங்கள். ‘‘ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.” அ.11. சு.131. 25(அ). “அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது.” மோடி இந்த மனு சாத்திர தர்மத்தை நிறுவ வேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டவர். அதனால் அவாள் உயிர் தான் உயிர்! அடுத்தவா உயிரெல்லாம் உயிரே அல்ல! தவளையை விடவும் தரங்கெட்டது. தவளையின் தகுதியை விட ஒரு தம்புடி கூட பார்ப்பனர் அல்லாதவரின் உயிர்கள் உயர்ந்ததல்ல! அதனால் தான் அவாள் சாதியைச் சார்ந்த ஸ்வாதி கொல்லப்பட்டபோது கொந்தளித்தார்கள்; கொதித்தார்கள். அப்போது 128 கோடி மக்களில் ஒரு ஸ்வாதி தானே செத்துப் போயிருக்கின்றாள் என்று வாய் பொத்தி செத்துக் கிடக்கவில்லை. இந்த சேகர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து பதிவு போட்டார்கள். ஆனால் இப்போது இழந்து போன இந்த 80 உயிர்களை மிகத் துச்சமாக நினைக்கின்றார்கள். இவர்களை இப்படி நினைக்கத் தூண்டுவது அவர்களின் மனு சாத்திரம் தான். இதோ திருக்குர்ஆன் பிரகடனப் படுத்துகின்ற மனித உயிர் மாண்பை பாருங்கள்! “உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப்பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்” அல்குர்ஆன் 5:45 மனித உயிரென்ன? மனிதனின் உறுப்புக்கு மனிதனின் உறுப்பு தான் பரிகாரம் என்று மனிதனின் மாண்பையும், புனிதத்தையும் இறை வேதம் திருக்குர்ஆன் நிலை நாட்டுகின்றது. ஆனால் மோடிக் கும்பல் நிலைநாட்ட நினைக்கின்ற இந்து ராஜ்ஜியத்தில் மனித உயிர் மரியாதையையும், மதிப்பையும் பாருங்கள். தவளையினும் கேடாய் தரை மட்டமாகப் பார்க்கப்படுகின்றது. அதனால் தான் மாட்டுக்காக மனித உயிரைக் கொன்று குவிக்கின்ற மாபாதகர்களாகவும், மகா காதகர்களாகவும் தான் இவர்கள் இருக்கின்றார்கள்! ஆயிரம், ஐநூறு ரூபாய்களை வெறுந்தாளாக்கியதால் அன்றாடம் மாளுகின்றவர்களை ஆளுகின்ற இந்த மிருக வர்க்கம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கும் இது தான் காரணம். கண்டு கொள்பவர்களாக இருந்தால் கறுப்புப் பணம் என்ற பெயரில் இதுவரை மனித உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் கறுப்புச் சட்டத்தை இந்நேரம் திரும்பப் பெற்றிருப்பார்கள். ஆனால் இவர்கள் திரும்பப் பெறமாட்டார்கள். அதே சமயம் அல்லாஹ் இவர்களை திரும்பப் பெறுகின்ற நேரம் நெருங்கி விட்டது என்பதை விட இவர்களைத் தூக்கி அடிக்கக் கூடிய நேரம் நெருங்கி விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் வடித்த கண்ணீர், அவர்கள் சபித்து தள்ளிய சாபங்கள் அத்தனையும் அவர்களை விட்டு வைக்கப் போவதில்லை. ஐநூறு ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்ற மோடி அறிவித்த பிறகு மக்கள் படுகின்ற அல்லல்களையும், அவஸ்தைகளையும் ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் விமர்சித்திருக்கின்றன. ஏகத்துவம் எதையும் உண்மையான ஓரிறைக் கொள்கை அடிப்படையில் தனது பார்வையைப் பதிய வைக்கும். அந்த அடிப்படையில் ஏகத்துவம் மாத இதழ், செல்லாமல் போன நோட்டுகள் விஷயத்தில் அத்தகைய பார்வையைத் தான் பதிய வைக்கின்றது. அதிகாலையில் அரசு தொலைக்காட்சி முதல் தனியார் தொலைக்காட்சிகள் வரை உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் டிவி பெட்டிகளைத் திறந்த மாத்திரத்தில் அவற்றில் ஆக்கிரமித்து நிற்பவர்கள் சோதிடர்கள் தான். ராசி பலன் என்ற பெயரில் வான நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அன்றைய நாளின் பலன்களைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். மக்களை இம்மாபெரிய அளவில் அலைக்கழிக்க வைத்து அவர்களின் ஆருயிர்களைப் பறிக்கக் காரணமாக அமைந்த செல்லாத நோட்டுகளைப் பற்றி முன்கூட்டியே மக்களிடம் இந்தச் சோதிடர்கள் ஏன் சொல்லாமல் போனார்கள்? நிச்சயமாக அவர்கள் ஒரு போதும் அதைச் சொல்ல முடியாது. அதற்கு காரணம் மறைவான ஞானம் என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வாகிய அந்த ஒரு கடவுளுக்கு மட்டும் சொந்தமான தனி ஞானமாகும். அதில் அவனது படைப்பினங்கள் யாரும் எள்ளளவும் எள் முனையளவும் உரிமை கொண்டாட முடியாது. இதைத் தான் நாட்டில் நடந்த இந்தச் சம்பவம் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுகமுடிவு நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன். அல்குர்ஆன் 31:34 என்ற அல்லாஹ்வின் வசனம் இதையே உண்மைப் படுத்துகின்றது. சோதிடம் என்பது ஒரு பகிரங்க ஏமாற்று வேலை என்பதில் முஸ்லிம்களுக்கும், பிற சமுதாய மக்களுக்கும் கிடைக்கும் பாடமும் படிப்பினையாகும். இதில் முஸ்லிம்களுக்கு மட்டும் இன்னொரு பாடமும் படிப்பினையும் இருக்கின்றது. இஸ்லாமிய மார்க்கத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வோ அவனது தூதரோ காட்டித் தராத எந்த வணக்கத்தையும் செய்யக் கூடாது. காரணம் அது பித்அத் எனும் புதிய செயலாகும். அவ்வாறு செய்பவர்களது வணக்க வழிபாடுகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்படாது என நபி (ஸல்) அவர்கள் தெரிவித்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப் பட்டதாகும். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 2697 அத்தகைய எந்த வணக்கமும் அது செல்லாத நோட்டுக்குச் சமமாகும். ஆயிரம், ஐநூறு நோட்டுகள் செல்லாததாகி விட்டதால் நாம் படுகின்ற அவஸ்தையையும் அல்லலையும் கண்கூடாகக் கண்டு விட்டோம். இவ்வுலகத்தில் பின்வரும் காலங்களில் இந்தப் பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் நிவர்த்தி ஆகிவிடும். ஆனால் மறுமையில் நாம் ஏமாந்து விட்டால் அது நிவர்த்தியாகுமா? என்று ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று முஸ்லிம்கள் பராஅத் இரவு, மிஃராஜ் இரவு வணக்கம், அன்றைய பகல்களில் நோன்பு, கூட்டுத் துஆ, ராத்திபுகள், மவ்லிதுகள், கத்தம் ஃபாத்திஹாக்கள், மீலாது விழாக்கள் என்று எண்ணிலடங்கா புதிய, புதிய வணக்க வழிபாடுகளைச் செய்கின்றனர். இவை தங்களுக்கு நாளை மறுமையில் நன்மை தரும் என்ற நம்பிக்கை அடிப்படையில் தான் செய்கின்றார்கள். ஆனால் இவை மறுமையில் செல்லாதது என்று அறிவிக்கப்படும். அப்போது ஈடு செய்ய முடியாத இழப்பும் நஷ்டமும் கைசேதமும் ஆகும். மோடியைப் போன்று முட்டாள்தனமாக திடீரென்று செல்லாது என அல்லாஹ் அறிவிக்க மாட்டான். அவன் முன்னரே அறிவித்து விட்டு அல்லது எச்சரித்து விட்டுத் தான் செய்வான். இதோ அந்த எச்சரிக்கைகள்… “செயல்களில் நட்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’’ என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அல்குர்ஆன் 18:104 (ஏகஇறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும்போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை (அல்லாஹ்) நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன். அல்குர்ஆன் 24:39 எனவே முஸ்லிம்கள், இந்தச் செல்லாத நோட்டுகளைப் பாடமாகவும் படிப்பினையாகவும் கொண்டு, அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் அங்கீகரிக்கப்படாத பித்அத் எனும் புதிய வணக்கங்களைச் செய்யாமல் அவனும் அவனது தூதரும் அங்ககீகரித்த வணக்கங்களை மட்டும் செய்து மறுமையில் தங்களை பெரும் நஷ்டத்திலிருந்து காத்துக் கொள்வார்களாக! தவ்ஹீது ஜமாஅத் இந்தப் பெரும் நஷ்டத்திலிருந்து மக்களைக் காக்கின்ற தூய பணியில் தன்னை அர்ப்பணித்து அழைப்புப் பணி ஆற்றுகின்றது. அதனால் தான் மோடியின் முட்டாள்தனமான அறிவிப்பில் மற்றவர்கள் உலக ரீதியான பார்வையை மட்டும் பதிகின்ற வேளையில் மறு உலக ரீதியிலான பார்வையை ஏகத்துவம் தனது இந்தத் தலையங்கத்தில் பதிய விடுகின்றது; மக்களிடம் பரவ விடுகின்றது.

Thursday, August 29, 2019


23 Aug 19
Jamal usmani-9840544026
E. Mohamed (HO)- 9952035222
Saleem Misc - 9245460369
Muheen ahamed-7338870562
Feros Khan - 9941578654
Mustak ahamed - 9884997157
Sabeer Misc (KALANJIAM)
Mubarak - 9791193988
Nagar sultan - 9444888361
Ameen - 9884162525
Riyaz ahamed - 9840331431
Nabiyullah-9003694183
Azarudeen - 8124571768
Mansoor - 9176757725
Sithik - 9940462811
Peer puliyathope-9840043483
Mohamed ali - 9710639028
Shuhaib Thiruninravur- 8667500741